கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவா்களின் விடுதலைக்காக என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்..

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவா்களின் விடுதலைக்காக என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்..

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களின் விடுதலைக்காக தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் தான் செய்வதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் தா்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளாா். 

யாழ்.பல்கலைக்கழக பேரவை உறுப்பினா்களுக்கும், இராணுவத்தினருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவா் இதனை கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது. 

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே மேற்படி சோதனை நடவடிக்கை யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு