இரு பயங்கரவாதிகள் நாட்டைவிட்டு தப்பி ஓட்டம்..! கைது செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரம்.

ஆசிரியர் - Editor I
இரு பயங்கரவாதிகள் நாட்டைவிட்டு தப்பி ஓட்டம்..! கைது செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரம்.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்த்தா்கள் இரு பயங்கரவாதிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடி வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக உள்ளதாக புலனாய்வுதுறையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்க வேண்டும் என நம்பும் விசாரணையாளர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளதாகவும், அது தொடர்பில் இராஜதந்திர மட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் 

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பின்னணியில் செயற்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதன்படி அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர். அத்துடன், தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அடிப்படைவாத அமைப்பின் பல முக்கியஸ்தர்கள் சிக்கியுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்வதாக 

அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நெறிப்படுத்தியதாக நம்பப்படும் தற்கொலை குன்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிமின் மிக பிரதான சகாக்களுக்கு சொந்தமான தெமட்டகொட மஹவில கார்டன் வீடு முற்றாக 

குற்றப்புலனாய்வுத் துறையினரின் பொறுப்பின் கீழ் கொன்டுவரப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலும் தற்கொலை தககுதல்கள் நடாத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் தெமட்டகொடை காவற்துறையினரிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைகளைப் பொறுப்பேற்று, 

நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதன்போதே வீட்டை பொறுப்பேற்றதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிவானுக்கு தெரிவித்திருந்தனர்.இவ்வாறு குற்றப்புலனாய்வுத் துறையால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு வீடானது, 

ஹ்ரானுடன் ஷங்ரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் இல்ஹாம் மற்றும் சினமன் ஹோட்டலில் தாக்குதல் நடத்­திய மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் இன்சாப் ஆகியோர் வசித்த, அவர்களது தந்தையான பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் இப்ராஹீமுக்கு 

சொந்தமானதாகும். மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட 19 பேர் தெமட்டகொடை குன்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் துறையின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக 

நேற்று (07.05.19) மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி நீதிவானுக்கு அறிவித்தார்.இந்த நிலையில் தெமட்டகொடை தாக்குதலில் இறந்தவர்களின் டி.என்.ஏ. சோத­னைகள் ஊடாக மரண விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட நீதிவான் 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்ககை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு