குண்டுப் பொதியைத் தேடிச் சென்றவர்களுக்கு கிடைத்த கஞ்சா பொதி!

வடமராட்சி கிழக்கு - பூனைத்தொடுவாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மர்மமான பொதி ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கினர்.
அங்கு சென்ற பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதை அடுத்து, பொதிக்குள் கஞ்சா இருப்பது இனங்காணப்பட்டது.
கஞ்சா தொகுதியினை மீட்ட பொலிஸார், அவை படகின் மூலம் கொண்டு வரப்பட்டு, விற்பனைக்காக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், மறைத்து வைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.