பிரித்தானியாவில் கத்திக்குத்து- இலங்கையர் பலி! இரவில் நடந்த பயங்கரம்

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் கத்திக்குத்து- இலங்கையர் பலி! இரவில் நடந்த பயங்கரம்

பிரித்தானியாவின் Pinner பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க ரவி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கடையில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்களே இந்த கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு நேற்று அதிகாலை 6 மணிக்கு பொலிஸார் அழைக்கப்பட்ட போதிலும் 45 நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் மிகவும் அன்பானவர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் காலையிலேயே தனது கடையை திறந்து வைத்து விட்டு, அவரே வீடுகளுக்கு உணவு வழங்க செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் கருத்து வெளியிட்டவர்கள், அண்மையில் அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் அன்பான மனிதன். இரக்க குணமுடைய சிறந்த நபர். அவர் கண்ணாடி அணிந்திருப்பார்.எந்த நேரமும் புன்னகையுடன் இருப்பார். நாங்கள் அவருடன் சில விளையாட்டுக்களையும் விளையாடுவோம். அந்த கடையில் வாரத்திற்கு 5 நாட்கள் குறித்த நபர் பணியாற்றுவார்.

அப்பாவியான இந்த நபரின் பணி செய்ய சென்ற போது கொலை செய்யப்பட்டதென்பது மிகவும் கொடுமையான விடயமாகும். அன்பான ஒருவரை திருட்டு சம்பவத்தினால் இழந்து விட்டோம் என தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு