பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருதை மலேசிய பிரதமருக்கு அளித்து கவுரவம்.

ஆசிரியர் - Admin
பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருதை மலேசிய பிரதமருக்கு அளித்து கவுரவம்.

பாகிஸ்தான் நாட்டின் தேசியநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்ற மஹதிர் முஹம்மது நேற்று இஸ்லாமாபாத் வந்தார். 

இன்று பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற தேசியநாள் விழாவில் மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் ‘நிஷான் - இ- பாகிஸ்தான்’ எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பேசிய மஹதிர் முஹம்மது பாகிஸ்தான் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து துறைகளிலும் மலேசியா அரசு உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு