ஐக்கிய அரபு நாட்டில் இளம் யுவதிக்கு ஏற்பட்ட பயங்கரம்! குளியல் அறைக்குள் ரகசிய கமரா

ஆசிரியர் - Admin
ஐக்கிய அரபு நாட்டில் இளம் யுவதிக்கு ஏற்பட்ட பயங்கரம்! குளியல் அறைக்குள் ரகசிய கமரா

ஐக்கிய அரபு நாட்டில் இலங்கை பெண்ணின் குளியலறையில் இரகசிய கமரா வைத்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர் Al Rashidiya பகுதியில் உள்ள வீட்டினை தனது நண்பருடன் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரது குளியலறையில் திடீரென கையடக்க தொலைபேசி வெளிச்சம் வெளியானதை கண்ட யுவதி கூச்சவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்த போது கையடக்க தொலைபேசியில் யுவதியை படம் பிடிக்கும் வகையில் கமரா பொருத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் தனது வீட்டை பகிர்ந்த இலங்கையரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்த போது, அதில் நிர்வாண புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் குறித்த நபர் நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு