அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் – நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்!

ஆசிரியர் - Admin
அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் – நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்!

வடகிழக்கு அவுஸ்ரேலியாவில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் வசிக்கு முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

பிராந்தியத்தில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக பேரழிவுமிக்க வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்ஸூக் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். அதேவேளை, டவுன்ஸ்வில்லே பகுதியில் சுமார் 750 வீடுகள் வௌ்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளால் மதிப்பிடப்பட்ட பின்னர் அந்த குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் வாழும் மக்கள் வீடுகளில் இருந்து வௌியேறி வேறு இடங்களில் தங்கியுள்ள நிலையில், துரித இருப்பிடங்களை தேடி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சுமார் 1,100 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு