நீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி

ஆசிரியர் - Admin
நீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி

தைவானை சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஜிஜிவூ. இவர் மலைச்சி கரங்களில் நீச்சல் உடையில் ஏறி அதை செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். அதன் மூலம் பிரபலமாக திகழ்ந்தார்.

இந்த நிலையில் தைவானில் உள்ள யுஷான் தேசிய பூங்கா பகுதியில் உள்ள மலை சிகரத்தில் ஏறி ‘பிகினி’ நீச்சல் உடையில் எடுத்த செல்பியை வெளியிட்டார். அப்போது கால் தவறி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.

பலத்த காயம் அடைந்த அவர் அதை சேட்லைட் போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார். அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்தன. இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு