போருக்கு தயாராகுங்கள்…! ராணுவத்துக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

ஆசிரியர் - Admin
போருக்கு தயாராகுங்கள்…! ராணுவத்துக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

தைவான் பிரச்னையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு பதிலடி தரும் வகையில், சீன ராணுவம் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.

சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட தைவானை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் சீன ஆளுகைக்கு உள்பட்ட ஒரு பகுதியே என்று சமீபத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருந்தார். மேலும், தைவானை மீண்டும் சீனா உடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், சீனாவின் இந்த நகர்வுகளை அமெரிக்கா ரசிக்கவில்லை. தைவானின் பாதுாப்புக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். இதனால், கடுப்பான ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.

சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜின் பிங், “மிக வேகமாக நவீனமாகி வரும் சீன ராணுவம், போருக்கும், எத்தகையதொரு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கவேண்டும். சீன கம்யூனிஸ்ட் இடும் கட்டளைகளை உறுதிபட நிறைவேற்றவேண்டும்” என்று கூறியுள்ளார்.

சீன அதிபரின் இந்த கருத்துக்கள் சர்வதேச அளவில் பரபரப்பை உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே, தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் மோதி வருவது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு