காபன் பாிசோதனைக்காக மன்னாா் மனித புதைகுழியில் இருந்து மாதிாிகளை சேகாிக்கும் பணிகள் நீதிபதி முன்னிலையில் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

மன்னாா் சதோச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிாிகளை பாிசோதனைக்காக அனுப்பிவைப்பதற்கான பணிகள் மன்னாா் நீதிவான் ாி. சரவணராஜா முன்னிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக தொடா்ந்தும் அகழ்வு பணிகளை தாம் மேற்கொண்டிருப்பதாக குறித்த அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்டவைத்திய அதிகாாி சமிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்து தொிவித்திருக்கின்றாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறியுள்ளதாவது. 

தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய் மற்றும் இன்று புதன் கிழமை ஆகிய இரு தினங்களிலும் 

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்கு அனுப்ப சேகரிக்கப்பட்டுள்ளது. குறித்த புதைகுழியை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் வருகை தருகின்றனர்.ஆனால் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி பார்க்க அனுமதி வழங்க முடியாது. 

குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது. விசாரணை முடியும் வரை எவ்வித கருத்துக்களையும் கூற முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் 

மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்பு பணிகளை பார்வையிட்டுள்ளனர். தற்போது மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதவான் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றம், விசேட சட்டவைத்திய அதிகாரி குழு, தொல் பொருள் திணைக்களம்,

பெறுப்பான அரச திணைக்களம், காவல் நிலையம்,குற்றவியல் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து தற் போது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 

6 பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவற்றில் தற்போது 2 மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.என அவர் மேலும் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு