இலங்கையின் தேசிய கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு குளித்த முதியவா், வேட்டி வாங்கி கொடுத்த ஊடகவியலாளா்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் தேசிய கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு குளித்த முதியவா், வேட்டி வாங்கி கொடுத்த ஊடகவியலாளா்..

கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. 

அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளதாவது, 

நான் ஒரு ஊடகவியளார் என்ற வகைளில் இந்த செயற்பாட்டை கண்டு மிகவும் மனவருத்தம் கொண்டதுடன். உடனே குறித்த நபரிடம் சென்று இந்த செய்பாடு குறித்து அன்புடன் வினாவினேன். 

அவர் கூறியது “இது என்னா துணிதானே” பாராளுமன்றத்தில் நடக்காததா நடந்து விட்டது என்று சிறித்துக் கொண்டே கூறினார். 

சரி அய்யா தேசிய கொடியின் மகிமை தெரியுமா என்று கேட்டேன் தெரியாது என்றார். பின் இலங்கை தேசிய கொடியைப்பற்றி விபரமாக கூறினேன்.

தம்பி மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தெரியாமல் செய்து விட்டேன். எனக்கு இப்போது 65 வயது இது வரைக்கும் எனக்கு தெரியாது இனிமேல் இலங்கை தேசிய கொடிக்கு 

எனது முழுமையான மறியாதை கிடைக்கும் இதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கின்றேன் என்றார்.  அப்படி என்றால் இது வரை காலமும் இவருக்கு தேசிய கொடிபற்றி தெரியாமல் இருப்பதற்கு யார் காரணம். 

பிறகு அவரிடம் இருந்து அந்த தேசிய கொடி என்னால் பெற்றுக் கொள்ளபட்டு பாதுகாப்பாக வைக்கபட்டள்ளது. அவருக்கு உடுத்த வேட்டி ஒன்றும் வழங்கபட்டது. 

அவர் மிகவும் சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னிப்பு கேட்டு சென்றார்.  என் பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு