டொனால்டு டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய கடற்படையின் மூத்த வீரரை கைது செய்த போலீசார்!

ஆசிரியர் - Admin
டொனால்டு டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய கடற்படையின் மூத்த வீரரை கைது செய்த போலீசார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மட்டிஸ், உளவுத்துறை தலைவர் கிறிஸ்டோபர்ரே, மற்றும் கடற்படை உயர் அதிகாரி ஆகியோருக்கு, கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கடிதம் அனுப்பியவர் முகவரி எதுவும் இல்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை பரிசோதித்தனர். அதில் ரிசின் எனப்படும் வி‌ஷம் தடவப்பட்டிருந்தது.

எனவே, தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் உதா மாகாணத்தில் லோகன் நகரை சேர்ந்த வில்லியம் கிளைடே ஆலென் என்பவரை கைது செய்தனர். இவர் அமெரிக்க கடற்படையின் மூத்த வீரர் ஆவார். இவர் மீது கசால்ட்லேக் சிட்டி கோர்ட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு