குழந்தை மூச்சுத்திணறி இறந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த தாய்!

ஆசிரியர் - Admin
குழந்தை மூச்சுத்திணறி இறந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த தாய்!

பிரித்தானியாவில் 7 வார குழந்தை மூச்சுத்திணறி இறந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Stacey Atkinson (29) என்ற பெண் மது போதையில் அசந்து தூங்கியுள்ளார். அப்போது அவருடைய 7 வார குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் மதுபோதையில் இருந்ததன் காரணமாக Stacey-ஆல் கண்டுகொள்ள முடியவில்லை. மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது அவருடைய குழந்தை Chloe Atkinson Wilkie மூச்சின்றி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து பொலிஸார் தண்டனை சட்டம் 1933 ன் பிரிவு 1 (1) படி குழந்தையை கவனிப்பதில் அலட்சியமாக இருந்த Stacey மீது வழக்கு பதிவு செய்தனர். இதுசம்மந்தமான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி Clement Goldstone, Stacey-ன் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று வழக்கின் விசாரணையை 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் Stacey-க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு