கேரளாவுக்கு 1கோடி வழங்கிய இசைப்புயல்

ஆசிரியர் - Admin
கேரளாவுக்கு 1கோடி வழங்கிய இசைப்புயல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தனது குழுவின் சார்பாக் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக  அங்கு பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது  மழைநீர் வடிந்து இயல்புநிலை திரும்பி வரும் நிலையில்  அங்கு எலிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 28 பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே  அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு