20 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் கட்டி வந்த இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

ஆசிரியர் - Admin
20 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் கட்டி வந்த இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 20 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளுடன் இந்தியர் ஒருவரை, பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை 6.30 மணியளவில், துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த இந்தியர் ஒருவர், 20 கிலோ தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், இந்தியாவைச் சேர்ந்த 47 வயதான போசாலே தர்மராஜ் கங்காதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தலா ஒரு கிலோ எடையுள்ள 20 தங்கக் கட்டிகளை தனது உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் போதே , கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு