கண் திறந்தார் கருணாநிதி!

ஆசிரியர் - Admin
கண் திறந்தார் கருணாநிதி!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க தலைவராக 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கருணாநிதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அம்புலன்ஸ் மூலம் உடனடியாகக் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் செல்கின்றனர்.

இதனிடையே,கருணாநிதியின் உடல்நலம் சரியாக வேண்டும் எனத் திமுக தொண்டர்கள் பலரும் மருத்துவமனை வெளியே நாள் முழுவதும் காத்ததிருக்கின்றனர்.

இந்நிலையில், திமுக கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல்காந்தி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக விசாரித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி “கருணாநிதி நன்றாக உள்ளார். உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் எங்களுக்கு நீண்ட காலமாக நட்பு உள்ளது. இதன் காரணமாக, அவரை நேரில் காண வந்தேன். தமிழக மக்களைப் போலவே கருணாநிதியும் மிகுந்த மன உறுதி கொண்டவர்” எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு