யாழ்.தெல்லிப்பழை மகாஜனா கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை மகாஜனா கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு விளக்கமறியல்!

யாழ்.மகாஜனா கல்லுாரி ஆசிரியரால் மாணவர்கள் 3 பேர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட ம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை 4 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென குறித்த ஆசிரியர் தாக்கிய நிலையில் இருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து ஆசிரியரை கைது செய்த பொலிஸார் மல்லாக நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்திய நிலையில் அவரை நான்கு நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணர்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தனது மகன் மீது குறித்த ஆசிரியர் பாடசாலையில் வைத்து திடீரென தாக்குதல் நடத்தியதாகவும் அதில் தலைப்பகுதி பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனின் மூளை நரம்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு