பழுதடைந்த உணவு விற்பனை! யாழ்.நகரிலுள்ள பிரபல சைவ உணவகத்திற்கு எதிராக வழக்கு...

ஆசிரியர் - Editor I
பழுதடைந்த உணவு விற்பனை! யாழ்.நகரிலுள்ள பிரபல சைவ உணவகத்திற்கு எதிராக வழக்கு...

யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் பழுதடைந்த உணவினை வாடிக்கையாளருக்கு வழங்கிய பிரபல சைவ உணவகம் மீது யாழ்.மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் 23.05.2023  வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் குறித்த கடை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை மற்றும் மனித பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20kg உணவு பொருட்களும் பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. 

இதனை தொடர்ந்து நேற்றைய தினமே யாழ்.நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக சான்று பொருட்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான் சான்று பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் யூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு