நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவுக்காக யாழ்.மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு...

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவுக்காக யாழ்.மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு...

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில்,

நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், 

வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (20) பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தின்போது பாரம்பரிய முறைப்படி யாழ்.மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப்பெற்றிருந்தது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு