வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆறு பேர் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆறு பேர் போராட்டம்!

வடமாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டதோடு 

ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆறு பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு ஊழல்வாதியை ஜனாதிபதி  பதவி நீக்கம் செய்ய  வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

6 பேரின் போராட்டத்தினால் ஆளுநர் செயலகத்திற்கு மேலதிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு