கட்சி அலுவலக மோதல் வழக்கில் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் கைதாகி பிணையில் விடுதலை...

ஆசிரியர் - Editor I
கட்சி அலுவலக மோதல் வழக்கில் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் கைதாகி பிணையில் விடுதலை...

யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் இமாணுவேல் ஆனல்ட் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆள்ப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு