யாழ்.வண்ணார் பண்ணையில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வண்ணார் பண்ணையில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..

யாழ்.வண்ணார் பண்ணையில் மின்சாரம் தாக்கி 18 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரி மாணவனான கண்ணதாசன் இராகுலன் (வயது-18) என்ற மாணவனே உயிரிழந்தார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போது பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் ஏற்பட்ட மின் ஒழுக்கு மாணவனை தாக்கியுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் 

விசாரணைகளை முன்னெடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு