யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெய்த மழையால் சில பகுதிகளில் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெய்த மழையால் சில பகுதிகளில் பாதிப்பு..

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் காற்றினால் நேற்றிரவு சில பிரதேசங்களில் பல தடவைகள் மின்சாரம் தடைப்பட்டதுடன், கொக்குவில் பகுதியில் காற்றினால் பாரிய மரம் ஒன்று சரிந்து பிறவுண் வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது. 

இதனால் இன்று காலை மின்தடை மற்றும் போக்குவரத்து தடையேற்பட்டிருந்தபோதும், உடனடியாக மரம் வெட்டி அகற்றப்பட்டுவருகின்றது. இதேபோல் மூளாய் பகுதியில் மின்கம்பி அறுந்து வீதியில் விழுந்துள்ளது. 

இந்நிலையில் பொதுமக்கள் சிலர் அங்கு கூடி வீதியால் செல்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கிவருகின்றனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக மின்சாரசபைக்கு தகவல் வழங்கப்பட்டும் அவர்கள் பல மணிநேரமாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு