யாழ்.சுன்னாகம் - கந்ரோடையில் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை திணிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - கந்ரோடையில் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை திணிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்...

யாழ்.சுன்னாகம் - கந்தரோடை பகுதியில் திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை கண்டித்து நாளை பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 

கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 

தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு