யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் இடம்பெற்ற அடாவடியை கண்டித்து அபிவிருத்தி குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் இடம்பெற்ற அடாவடியை கண்டித்து அபிவிருத்தி குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..

யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் மக்களின் காணியில் அடாத்தாக விகாரை கட்டியதற்கு எதிர்ப்பு தொிவித்தோரிடம் பொலிஸார் அடாவடி புரிந்ததை கண்டித்து யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , சி. சிறிதரன் , த. சித்தார்த்தன் , மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் 

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு