யாழ்.தையிட்டியில் போராட்டம் நடத்துவோருடன் சுமந்திரன் / மாவை சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தையிட்டியில் போராட்டம் நடத்துவோருடன் சுமந்திரன் / மாவை சந்திப்பு..

யாழ்.வலி,வடக்கு - தையிட்டி பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள பெளத்த விகாரையை சூழவுள்ள காணிகளை விடுவிக்ககோரி போராட்டம் நடத்துவோரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.

 

இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விசாரணையும் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா பார்வையிட்டனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு ஆன உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர்களிடம் இப்போது எடுத்துக்காட்டினார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு