ஆசிரியர் பெரில் மாணவிக்கு தொலைபேசி வழியாக தொந்தரவு! இயங்க முடியாத நிலையில் பாடசாலை, கல்வி அதிகாரிகள் திணறல்...

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் பெரில் மாணவிக்கு தொலைபேசி வழியாக தொந்தரவு! இயங்க முடியாத நிலையில் பாடசாலை, கல்வி அதிகாரிகள் திணறல்...

யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில் மாணவிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலை இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரை கூறி தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை அப்பாகுதி மக்கள் பாடசாலை முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்ட மக்கள் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் பெயரை கூறி அவரே மாணவிக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததாகவும் அவரை வெளியே அனுப்புமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

நிலைமையை அறிந்த ஆசிரியர் பின் கதவால் பாடசாலையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்த நிலையில் பொலிசாருக்கு தகவல்  வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரித்த பொலிசார் குறித்த  மாணவியுடன் உரையாடி தொலைபேசி இலக்கம்  சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை.

எனினும் ஊர் மக்கள் தொலைபேசி உரையாடல் குறித்து ஆசிரியருடையது தான் என தர்க்கம் புரிந்துவரும் நிலையில் பகுப்பாய்வுக்காக கொழுப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலையை முற்றுகையிட்ட மக்கள் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் தரப்பால்  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட  ஆசிரியர்கள் பயத்தின் காரணமாக பாடசாலை செல்லாது  வலையத்திலும் அயல்  பாடசாலை ஒன்றிலும் தமது வரவுக் கையெழுத்துக்களை வைத்துள்ளனர்.

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தாத வரைக்கும் தம்மால் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என  கல்வி உயர் அதிகாரிகளுக்கு பாடசாலை ஆசிரியர்களால் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் 

இந்த விடயம் ஆளுநரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும் சுமுகமான உறவு ஏற்படாவிட்டால் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை முற்றாக மாற்றி புதிய ஆசிரியர்களை நியமிப்பது எனவும் 

அல்லது பாடசாலையை  அயல் பாடசாலையுடன் இணைப்பது தொடர்பிலும்  மாகாண கல்வி  உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு