யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணை குழு அமைத்துள்ள வடமாகாண கல்வி அமைச்சு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணை குழு அமைத்துள்ள வடமாகாண கல்வி அமைச்சு..

யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர்  நிதி மோசடியில் ஈடுபட்டதாக வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள்  வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடமாகாண கல்வி அமைச்சு கொக்குவில் இந்த கல்லூரியில் இடம்பெற்ற நிதி நிர்வாக முறைகள் விசாரிப்பதற்காக மூவர் அடங்கிய விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த குழு தனது விசாரணைகளை ஆரம்பிக்கும் என நம்பப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு