ஆசிரியர் ஒருவரின் பெயரில் மர்ம நபர் ஒருவர் மாணவிக்கு தொலைபேசி மூலம் தொல்லை! யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் ஒருவரின் பெயரில் மர்ம நபர் ஒருவர் மாணவிக்கு தொலைபேசி மூலம் தொல்லை! யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம்..

யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரின் பெயரில் தொலைபேசி வழியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்றைய தினம் மாணவியின் பெற்றோர் மற்றம் பாடசாலை சுற்றாடலில் உள்ள மக்கள் பாடசாலை வாயிலில் கூடியிருந்தனர். 

இதனால் தொலைபேசியில் குறிப்பிடப்பட்ட பெயருக்குரிய ஆசிரியர் அச்சம் காரணமாக பாடசாலை பின் கதவால் வெளியேறியிருக்கின்றார். 

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்தபோது, 

அது அந்த ஆசிரியருடையது அல்ல என தொியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு