நாளை வடகிழக்கு மாகாணங்கள் முடங்கும்! ஹர்த்தாலுக்கு வலுக்கும் ஆதரவு..

ஆசிரியர் - Editor I
நாளை வடகிழக்கு மாகாணங்கள் முடங்கும்! ஹர்த்தாலுக்கு வலுக்கும் ஆதரவு..

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் ஒன்று நாளை 25ம் திகதி இடம்பெறவுள்ளது. 

7 தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள்

என சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் முடக்கும் வகையில் நாளைய தினம் ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. இதேவேளை கிழக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் இந்த ஹர்தாலில் இணைந்து கொள்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு