தேர்தல் ஆணைக்குழுவுக்கு 500 ரூபாய் காசுக் கட்டளை அனுப்பியுள்ள யாழ்ப்பாண இளைஞன்..!

ஆசிரியர் - Editor I
தேர்தல் ஆணைக்குழுவுக்கு 500 ரூபாய் காசுக் கட்டளை அனுப்பியுள்ள யாழ்ப்பாண இளைஞன்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 500 ரூபாய் காசுக் கட்டளை அனுப்பியுள்ளார். 

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என கூறித்த பணத்தை அனுபியுள்ளார். 

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், 

சிறு துளி பெருவெள்ளம்" என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு