யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தேங்கும் மருத்துவ கழிவுகள்! உரிய பொறிமுறை இன்றி திணறும் அதிகாரிகள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தேங்கும் மருத்துவ கழிவுகள்! உரிய பொறிமுறை இன்றி திணறும் அதிகாரிகள்...

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் வைத்தியசாலைக்குள் தேங்குவதாக கூறப்படுகின்றது. 

மருத்துவ கழிவுகள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ்.நகரை அண்டிய கோம்பயன் மடம் பகுதியில் யாழ் மாநகரசபையின் அனுமதியுடன் 

மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்.மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்த தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த விடயம் தடைப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ்.போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு