யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் கையேற்கிறார்கள் இல்லையாம்! யாழ்.மாவட்டச் செயலர் வருத்தம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் கையேற்கிறார்கள் இல்லையாம்! யாழ்.மாவட்டச் செயலர் வருத்தம்...

யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் காணிகளை கையேற்க மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என யாழ்.மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். 

மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில் ராணுவத்தினிடமிருந்தும் கடற்படை யினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.  

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக இடம் பெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது. 

முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம். விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் 

தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்று அதனை உரிய பாவணைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும். 

விடுவிக்கப்பட்ட காணிகளில் ராணுவத்தினர் கட்டிடங்களை விட்டுச் சென்றுள்ளார்கள் எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கை ஏற்கத்தவறுவதால் அந்த கட்டிட பொருட்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்கின்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. 

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கை ஏற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.   

விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு