யாழ்.அத்தியடி பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

ஆசிரியர் - Editor I
யாழ்.அத்தியடி பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

யாழ்.அத்தியடி பகுதியில் கணவனை பிரிந்து தனது பெண் பிள்ளை ஒன்றுடன் வாழ்ந்த தாய் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்ததாகவும், 

இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும் கூறியுள்ளார். 

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் 

விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் சுப்பிரமணியம் கலாநிதி (வயது52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு