மீள்குடியேறவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் மற்றும் ஊக்குவிப்பு பணத்தை வழங்கிய ஜனாதிபதி!

ஆசிரியர் - Editor I
மீள்குடியேறவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் மற்றும் ஊக்குவிப்பு பணத்தை வழங்கிய ஜனாதிபதி!

மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு தலா 38 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, 

யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பலருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காசோலைகள் ஜனாதிபதியின் கைகளால் வழங்கி வைக்கப்பட்டது.

33 வருடங்களாக இடம்பெயர்ந்த இக்குழுவினர் தமது காணிகளை விடுவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு