தொலைபேசி சமிக்ஞை கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பட்டரிகளை திருடிய ஆசாமி சிக்கினார்!

ஆசிரியர் - Editor I
தொலைபேசி சமிக்ஞை கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பட்டரிகளை திருடிய ஆசாமி சிக்கினார்!

தொலைபேசி சமிக்ஞை கோபுரத்தின் பட்டரிகளை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பெலியத்த - தம்முல்ல பகுதியில் உள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த 8 பட்டரிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. 

அந்த பட்டரிகளின் பெறுமதி 4 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். 

திருடப்பட்ட பட்டரிகளை முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நேற்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு