வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்க்க சென்ற கணவனும், தாயாரும் விபத்தில் உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்க்க சென்ற கணவனும், தாயாரும் விபத்தில் உயிரிழந்த சோகம்..

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவியை பார்ப்பதற்காக தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் விபத்தில் சிக்கியதில் இருவரும் உயரிழந்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் இ.போ.ச பேருந்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மல்சிறிபுர நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ரத்நாயக்க என்பவரும் 62 வயதான பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காக தனது தாயுடன் 36 வயதான நபர் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து ஹொரவபத்தானை நோக்கி பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய ந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு