பெண்கள் தனித்திருந்த குடியிருப்புக்குள் நுழைந்த நபர் பலி! இரு அரச ஊழியர்கள் கைது...

ஆசிரியர் - Editor I
பெண்கள் தனித்திருந்த குடியிருப்புக்குள் நுழைந்த நபர் பலி! இரு அரச ஊழியர்கள் கைது...

புகைரத ஊழியர்களின் குடியிருப்புக்குள் நுழைய முயன்றவர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் ரயில்வே கட்டுப்பாட்டாளர் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த 13ஆம் திகதி ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ குடியிருப்புக்குள் நுழைய முற்பட்டபோது, 

குறித்த வீட்டில் தனியாக இருந்த இரண்டு யுவதிகள் அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு வந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இருவர் 

 குறித்த நபரை தாக்கியதில் அவர் கீழே வீழ்ந்து காயமடைந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 

இரண்டு கட்டுப்பாட்டாளர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.உயிரிழந்தவரை தாங்கள் தாக்கவில்லை என்றும், 

உத்தியோகபூர்வ இல்லத்தின் மேல் மாடியிலிருந்து தவறி வீழ்ந்தே அவர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு