யாழ்.சுன்னாகம் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண்! மேலும் 4 பேரை தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண்! மேலும் 4 பேரை தேடுகிறது பொலிஸ்..

யாழ்.சுன்னாகம் பகுதியில் இரு வாள்வெட்டு கும்பல்கள் மோதிக் கொண்டதுடன், ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சட்டத்தரணிகள் மூலம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

சுன்னாகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் காரில் பயணித்த கனி என அழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தப்பட்டது. 

விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் சட்டத்தரணி மூலம் மூவரும் சரணடைந்துள்ளனர். 

மேலும் நான்கு பேர் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர் எனவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு