வடமாகாணத்திலிருந்து சென்ற லொறியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள்! பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு குழு பிங்கிரிய விரைவு...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திலிருந்து சென்ற லொறியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள்! பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு குழு பிங்கிரிய விரைவு...

லொறியின் கீழ் இரகசிய பெட்டி ஒன்றை வைத்து அதனுள் அதிகசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்துவைத்திருந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இருவர் பிங்கிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று 

பிங்கிரியவுக்கு சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் வெடிபொருட்களும் 

குறித்த இரகசிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு