புதிய கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது! ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ உள்ளிட்ட 5 கட்சிகள் தனிவழி - சீ.வி.விக்னேஸ்வரன், மணிவண்ணன் தனிவழி..

ஆசிரியர் - Editor I
புதிய கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது! ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ உள்ளிட்ட 5 கட்சிகள் தனிவழி - சீ.வி.விக்னேஸ்வரன், மணிவண்ணன் தனிவழி..

புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட 5 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளதுடன், நாளை புரிந்துணர்வு ஒப்பந்ததில் கைச்சாத்திடவும் தீர்மானித்துள்ளன. 

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் இந்த புதிய கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டது. 

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்குவந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்ததுதமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து 

கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார்.

இதேவேளை மணிவண்ணன், சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டாக இணைந்து தனித்து போட்டியிடவுள்ளதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு