புதிய கூட்டணி முயற்சிக்குள் விரிசலா? கசப்புடன் தனித்து இயங்கும் தீர்மானத்திற்குள் தள்ளப்படுகிறாரா மணி? தொடரும் கலந்துரையாடல், சீ.வி - மணி வெளியேறினர்..

ஆசிரியர் - Editor I
புதிய கூட்டணி முயற்சிக்குள் விரிசலா? கசப்புடன் தனித்து இயங்கும் தீர்மானத்திற்குள் தள்ளப்படுகிறாரா மணி? தொடரும் கலந்துரையாடல், சீ.வி - மணி வெளியேறினர்..

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் கலந்துரையாடலின் நடுவில் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வெளியேறியிருக்கும் நிலையில் புதிய கூட்டணியில் இழுபறி நீடிக்கின்றது. 

இது குறித்து கருத்து தொிவித்திருக்கும் மணிவண்ணன், தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகளில் இணக்கம் காணப்படவில்லை. மேலும் கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார். 

எனினும் சின்னத்திலேயே இழுபறி நீடிப்பதாக தொியவருகின்றது. இதேவேளை புதிய கூட்டணியில் இணையும் கட்சி ஒன்று தன்னுடைய சின்னத்தில் போட்டியிட விருப்பம் தொிவிப்பதுடன், அதனை பொதுச் சின்னமாக்க கேட்டுள்ளது. 

ஆனால் அதனை பலர் விருப்பாத நிலையிலேயே இழுபறி நீடிப்பதாக தொியவருகிறது. இதேவேளை இந்த கூட்டணி இழுபறி நீடித்தால் தனித்து போட்டியிடும் நிலைக்குள் தாங்கள் தள்ளப்படலாம் என மணிவண்ணன் அணி வட்டாரங்கள் கூறுகின்றன. 

இதேவேளை பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படாவிட்டால் இந்த கூட்டணி இரண்டாக பிளவடையும் எனவும் தற்போது விரிசல் ஆரம்பித்திருப்பதாகவும் தகவலறிந்தவர்கள் தொிவிக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு