மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுகிறார் ஆளுநர்! விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க புகழாரம்..

ஆசிரியர் - Editor I
மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுகிறார் ஆளுநர்! விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க புகழாரம்..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் தேவைகளை அறிந்து விரைந்து செயல்படக்கூடியவர் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க புகழாரம் சூட்டியுள்ளார். 

நேற்று வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தொழில் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளை மீள ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்திருக்கின்றார். 

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,  

வடமாகாண ஆளுநர் வடக்கு மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நன்கு அறிந்து செயற்படுகிறார். வடக்கில் உள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்கால வழிகாட்டலுக்காக பல்வேறுதுறை சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். 

எமது அமைச்சின் கீழுள்ள தொழில் பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். இங்குள்ள இளைஞர் யுவதிகளிடம் பல்வேறு திறமைகள் காணப்படுகின்ற நிலையில் 

 அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகளை பயன்படுத்தி தமது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். யாழ்.மாவட்டத்திலிருந்து தர்ஷினி தென்னிலங்கையில் சுதந்திக்கா இருவரும் பல்வேறு தடைகள் வந்தபோதும் 

தமது அயராத முயற்சியினால் சாதனை படைத்தவர்கள்.அவர்களைப் போன்று வடக்கு இளைஞர் யுவதிகளும் தமக்கு கிடைக்கின்ற சார்ப்பங்களை சரிவர பயன்படுத்தி தேசிய நீதியிலும் சர்வதேச நீதியிலும் உயர்வு பெற வேண்டும். 

ஆகவே அமைச்சர் என்ற வகையில் வடமாகாண இளைஞர் யுவதிகளுக்காக வடமாகாண ஆளுநர் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது பங்களிப்புக்களை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு