இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவும், தமிழர் ஒருவர் உரையாற்றவும் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவும், தமிழர் ஒருவர் உரையாற்றவும் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி..

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கும், தமிழர் ஒருவர் உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் விடுத்திருந்தார்.

நான் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமானால் தமிழில் உரையாற்றுவேன் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு