ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகம் திறப்பு!

ஆசிரியர் - Editor I
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகம் திறப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், 

யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் ஜெயேந்திரன்,

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு