யாழ்.உரும்பிராய் - விளாத்தியடி பகுதியில் கோப்பாய் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் - விளாத்தியடி பகுதியில் கோப்பாய் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

யாழ்.உருப்பிராய் - விளாத்தியடி பகுதியில் கோப்பாய் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியிருந்தனர். 

இதன்போது சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்துடன், 36 வயதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு