முன்பள்ளி சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

ஆசிரியர் - Editor I
முன்பள்ளி சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான முன்பள்ளிக் குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பள்ளி ஆசிரியர் யாழ்.கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன்போது சிறுவன் தவறிழைத்ததாக தெரிவித்து அவனை தடியால் அடித்துள்ளார். பின்னர் சிறுவனின் அழுகையை அடக்குவதற்கு முயற்சித்துள்ளார். 

இதனால் முகத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 36 வயதான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு