தலைவர் பிரபாகரனின் வீடு இராணுவம் மற்றும் பொலிஸாரின் அதியுச்ச பாதுகாப்பில்!

ஆசிரியர் - Editor I
தலைவர் பிரபாகரனின் வீடு இராணுவம் மற்றும் பொலிஸாரின் அதியுச்ச பாதுகாப்பில்!

யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு உச்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இராணுவத்தினர் , பொலிஸார் , புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 

அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர். 

இராணுவத்தின் தடைகளை மீறி துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது , துப்பரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து, அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் தாயகம் எங்கும் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு