யாழ்.கல்வியங்காடு - செங்குந்தா வீதியில் பகல்வேளையில் வீடு உடைத்துக் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு - செங்குந்தா வீதியில் பகல்வேளையில் வீடு உடைத்துக் கொள்ளை!

யாழ்.கல்வியங்காடு - செங்குந்தா இந்துக் கல்லூரி வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது, 

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த கொள்ளை தொடர்பாக மேலும் தெரியவருவது, 

கல்வியங்காடு செங்குந்தா இந்துகல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் (22) செவ்வாய்கிழமை மாலை வீட்டின் உரிமையாளர் ஜெகதீஸ்சன் ஐங்கரன் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்த தருணத்தில் 

இனந்தெரியாத கொள்ளை கும்பல் மர்மமான முறையில் முறையில் வீட்டுவளாகத்திற்குள் நுழைந்து பெறுமதியான தங்கத்தோடு இரண்டு, 

பணம் (இருபதாயிரம் ரூபா) , முப்பது அங்கர் பால் மா பெட்டி ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (23) வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து 

கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை களை முன்னேடுத்துவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு