யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் தாய், மகன் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் தாய், மகன் உட்பட 3 பேர் கைது!

யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரகசிய தகவல் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தாயும், மகனும் மற்றும் அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அயலவர் என மூவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து 15 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு